தமிழக அரசு விதிமுறைகளை தளர்த்துவதால், மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்துகள் இன்று முதல் இயங்குகின்றன.
ஸ்டேட் எக்ஸ்பிரஸ் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் (எஸ்.இ.டி.சி) 400 பேருந்துகளை இயக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகம் (டி.என்.எஸ்.டி.சி) 1,500 சேவைகளை இயக்குகிறது.
சூடுபிடிக்கும் தமிழ் – இந்தி மொழி யுத்தம் : டுவிட்டரில் அதகளம்
டி.என்.எஸ்.டி.சி 3,000 பேருந்துகள் மற்றும் எஸ்.இ.டி.சி 1,100 பேருந்துகளைக் கொண்டுள்ளது. சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு 300 பேருந்துகள் இயக்கப்படும் என்று எஸ்.இ.டி.சி மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மீதமுள்ள 100 பேருந்துகள், மதுரை-சேலம், கோயம்புத்தூர்-திருநெல்வேலி வழித்தடங்களில் இயக்கப்படும்.
ஒவ்வொரு எஸ்.இ.டி.சி பஸ்ஸிலும் 43 பேர் அமரக்கூடிய திறன் உள்ளது, ஆனால் சமூக விலகலை பராமரிக்க 26 இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அமர முடியும். 55 பேர் அமரக்கூடிய டி.என்.எஸ்.டி.சி, பஸ்ஸில் 30 பயணிகள் மட்டுமே ஏற முடியும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சூப்பரான இஞ்சி- மிளகு ரசம்: இப்படி செஞ்சு பாருங்க, வாசனை கமகமக்கும்!
பேருந்துகள் சுத்தம் செய்யப்பட்டு கிருமி நீக்கம் செய்யப்பட்டுள்ளன. வேலிட் டிக்கெட்டுகள் உள்ள பயணிகளின் உடல் வெப்பநிலையை சரிபார்த்த பிறகு டெர்மினல்களுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் பஸ்ஸில் ஏறுவதற்கு முன்பு தங்கள் கைகளை சுத்தப்படுத்துமாறு கேட்கப்படுவார்கள். பயணம் முழுவதும் முகமூடிகள் கட்டாயமாகும்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”