Advertisment

பொள்ளாச்சி கூட்டு பாலியல் விவகாரம்! 'பெண்ணைப் பெற்றவர்களுக்கு அடிவயிறு கலங்கும்'! - பொதுமக்கள் ஆவேசம்

பெண்களை சித்ரவதை செய்து பாலியல் கொடுமைப்படுத்தியது வீடியோ பார்த்து நெஞ்சம் பதைபதைக்கிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today in tamil,

Tamil Nadu news today in tamil,

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மாணவிகளிடம் பேஸ்புக் மூலம் நண்பர்களாக பழகி காதலிப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்து, அவர்களிடம் பணம் பறித்துள்ளனர். இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவங்களை வீடியோவும் எடுத்து உள்ளனர்.

Advertisment

Read More: குலை நடுங்கும் கொடூரம்: 150-க்கும் மேற்பட்ட மாணவிகளை சீரழித்த கும்பலுக்கு அரசியல் பின்னணி?

இதில் சபரிராஜன், (வயது 25),  திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கோவையில் இந்த கும்பலிடம் சிக்கி பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் காவல் நிலையம் சென்ற பின்னர்தான் இவ்விவகாரம் தொடர்பான அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி வருகிறது.

மேலும் படிக்க - விஸ்வரூபம் எடுக்கும் பொள்ளாச்சி பாலியல் விவகாரம்! வேகமெடுக்கும் காவல்துறை விசாரணை!

கைது செய்யப்பட்ட நபர்களின் செல்போனில் இருந்து 40க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர். தவிர, ஒரு பெண்ணை அந்த நபர்கள் பாலியல் துன்புறுத்தல் செய்யும் வீடியோவும் வெளியாகி இருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவை பார்த்த பலரும் தங்களது கடுமையான விமர்சனங்களை சமூக தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். பொதுமக்கள் அல்லாது பிரபலங்களும் சமூக தளங்களில் இதுகுறித்து கடும் விமர்சனத்தை பதிவிட்டுள்ளனர்.

கனிமொழி எம்.பி

மேலும் படிக்க - பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கு: அ.தி.மு.க.வில் இருந்து நாகராஜ் நீக்கம்!

நடிகர் ஜி.வி,பிரகாஷ்

இயக்குனர் கரு பழனியப்பன்

மேலும் படிக்க - பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: குற்றவாளிகளுக்கு மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

டிஆர்பி ராஜா

இவ்வாறாக பலரும் மிகக் கடுமையாக சமூக தளங்களில் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Pollachi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment