/tamil-ie/media/media_files/uploads/2019/12/a612.jpg)
சென்னையில் வரும் வியாழனன்று மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு, ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 2017ல் நடந்த ரசிகர்கள் சந்திப்பின் போதும் ரஜினி 'நான் அரசியலுக்கு வருவது உறுதி' என்பதை தெளிவுபடக் கூறியிருந்தார்.
Exclusive: ஜெயானந்த் திருமணத்தில் வெளிச்சத்திற்கு வரும் சசிகலா - திவாகரன் மோதல்
இந்நிலையில் சென்னையில் வரும் வியாழனன்று தனது மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோடம்பாக்கத்தில் உள்ள ரஜினிகாந்த்திற்குச் சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இந்தச் சந்திப்பு, வியாழன் காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது.
ஏற்கனவே இரண்டு முறை இத்தகைய சந்திப்புகள் நடைபெற்றுள்ள நிலையில் மூன்றாவது முறையாக நடைபெறவுள்ள இந்தச் சந்திப்பில், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அறநிலையத் துறையில் பணியாற்றும் அதிகாரிகள் இந்து என உறுதி ஏற்க வேண்டும் - ஐகோர்ட் உத்தரவு
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.