ஜன. 20 முதல் மீண்டும் பஸ் ஸ்டிரைக்? சி.ஐ.டி.யூ தலைவர்

தமிழ்நாடு போக்குவரத்து தொழில்சங்கங்களுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது நடவடி்கை எடுக்கப்படாது என உறுதியளிக்கப்பட்டது.

தமிழ்நாடு போக்குவரத்து தொழில்சங்கங்களுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது நடவடி்கை எடுக்கப்படாது என உறுதியளிக்கப்பட்டது.

author-image
WebDesk
New Update
metropolitan transport corporation, சென்னை பஸ் ஸ்டிரைக், bus strike in chennai latest news in tamil

போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடன் மீண்டும் பேச்சுவார்த்தை பிப்.7ஆம் தேதி நடக்கிறது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்; பணியில் இருந்து ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப் படி உயர்வை வழங்க வேண்டும்; புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட ஆறு அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்க தமிழ்நாடு அரசு செவிசாய்க்காத நிலையில், போக்குவரத்து ஊழியர்கள் ஜன.9ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.

Advertisment

இதையும் படிங்க : பஸ் ஸ்டிரைக் தற்காலிகமாக வாபஸ்; பணிக்கு திரும்புவதாக போக்குவரத்து தொழிலாளர்கள் உறுதி

இந்த நிலையில் பொங்கல் பண்டிகை காரணமாக அந்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினார்கள்.
இதற்கிடையில் பொங்கல் பண்டிகை முடிந்து இன்று (ஜன.19,2024) மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது நடவடி்கை எடுக்கப்படாது என உறுதியளிக்கப்பட்டது.

எனினும் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தொடர்ந்து, போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடன் மீண்டும் பேச்சுவார்த்தை பிப்.7ஆம் தேதி நடக்கிறது.
இதனால், மீண்டும் பஸ் ஸ்டிரைக் ஏற்பட போகிறதா? என்ற அச்சம் பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

பொங்கல் பண்டிகைக்கு முன்பு, போக்குவரத்து தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தப் போராட்டம், ஜனவரி 19 ஆம் தேதி வரை தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்தன.

சிஐடியூ தலைவர் பேட்டி

இந்த நிலையில் சிஐடியூ தொழிற்சங்க தலைவர் சௌந்தரராஜன் கூறுகையில், " போக்குவரத்து தொழிலாளர்களை அரசு இரண்டாம் தர குடிமக்களாக பார்க்கிறது; எங்களின் கோரிக்கை மீது எந்த முடிவும் எடுக்க முடியாது என கூறுகின்றனர்.
 முத்தரப்பு பேச்சு வார்த்தையில் அரசின் பதிலில் திருப்தி ஏற்படவில்லை; ஆகவே திட்டமிட்டபடி நாளை ( ஜனவரி 20)  முதல் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும்" என்றார்

இதையும் படிங்க : அரசு பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக்- தற்காலிக ஓட்டுநர், நடத்துனர்களுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

bus strike

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: