Advertisment

இன்றைய செய்திகள்: விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாதவர் மு.க.ஸ்டாலின் - முதல்வர் பழனிசாமி விமர்சனம்

இன்று தமிழகம் மற்றும் இந்தியாவின் அனைத்து பகுதிகளில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இன்றைய செய்திகள்: விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாதவர் மு.க.ஸ்டாலின் - முதல்வர் பழனிசாமி விமர்சனம்

Tamil Nadu news today updates Chennai weather : தமிழகம் மற்றும் புதுவையின் பல்வேறு பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Advertisment

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

அமெரிக்க அதிபர் இந்தியா வருகை

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரெம்ப் மற்றும் அவருடைய மனைவி மெலனியா ட்ரெம்ப் ஆகியோர் இந்தியாவிற்கு வருகை புரிய உள்ளனர். அகமதாபாத் மற்றும் ஆக்ராவிற்கு வருகை புரியும் அவர்களை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகள் குஜராத் மற்றும் உ.பி.யில் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான செய்திகளை படிக்க

ஜெயலலிதாவின் பிறந்தநாள்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் சட்டப்பேரவையில் முதல்வர், ஜெயலலிதாவின் பிறந்தநாளை பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கொண்டாடப்படும் என்று அறித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க : மாற்றுக் கட்சியினரும் பார்த்து வியந்த இரும்புப் பெண்மணி ஜெயலலிதா

Live Blog

Tamil Nadu news today updates : Chennai weather, TN politics, Donald Trump India Visit, Jeyalalithaa Birthday : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் அறிந்து கொள்ள லைவ் ப்ளாகிற்கு உங்களை வரவேற்கின்றோம்



























Highlights

    22:26 (IST)24 Feb 2020

    திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி

    திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் முதுமை காரணமாக ஓய்வெடுத்து வந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    21:44 (IST)24 Feb 2020

    சென்னையில் போலி ஹோமியோபதி கல்வி நிறுவனம்; 3 பேர் மீது வழக்குப்பதிவு

    சென்னை கோயம்பேடு அருகே போலி ஹோமியோபதி கல்வி நிறுவனம் நடத்திவந்த 3 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    21:23 (IST)24 Feb 2020

    விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாதவர் மு.க.ஸ்டாலின் - முதல்வர் பழனிசாமி கடும் விமர்சனம்

    முதல்வர் பழனிசாமி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாதவர் என்று கடுமையாக விமர்சித்துள்ளார். ஒரு விவசாயி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தான் உதாரணம் என்று கூறியுள்ளார். மேலும், “தமிழகத்திற்கு அதிமுக அரசுதான் 11 மருத்துவக் கல்லூரிகளை பெற்று தந்தது. அதிமுக அரசின் அனைத்து திட்டங்களும் காலத்தால் அழிக்கமுடியாத திட்டங்கள். அதிமுக ஆட்சியில் ஏழை மக்களுக்கு தடையின்றி மருத்துவ சேவை வழங்கப்படுகிறது.” என்று கூறியுள்ளார்.

    20:31 (IST)24 Feb 2020

    உலகக்கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணியை வீழ்த்தியது இந்திய அணி

    உலகக்கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.

    20:21 (IST)24 Feb 2020

    ட்ரம்பை வரவேற்கும் விதமாக காந்தியின் கொள்கை தாங்கிய வீடியோவை வெளியிட்ட ரஹ்மான்

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகையை வரவேற்கும் விதமாக காந்தியின் கொள்கையை தாங்கிய வீடியோ பாடல் ஒன்றை ஏ.ஆர்.ரஹ்மான் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

    19:41 (IST)24 Feb 2020

    போலீஸ்காரர் உள்பட 2 பேர் பலி: டெல்லியில் கலவர மயமான சி.ஏ.ஏ. போராட்டம்

    வடகிழக்கு டெல்லியில் இன்று சிஏஏ போராட்டம் மீதான வன்முறையின் போது முஹமது ஃபுர்கான் என்பவர் பலியானார். மேலும், இந்த வன்முறையில் ஒரு போலீஸ் கான்ஸ்டபிளும் பலியானர். 37 போலீஸார் காயமடைந்துள்ளனர்.

    19:23 (IST)24 Feb 2020

    டெல்லியில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது - உள்துறை செயலாளர்

    வடகிழக்கு டெல்லியில் சிஏஏ போராட்ட வன்முறையைத் தொடர்ந்து உள்துறை செயலாளர் அஜய் பல்லா கூறுகையில், களத்தில் போதுமான காவலர்கள் உள்ளனர். நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது. மூத்த அதிகாரிகள் களத்தில் உள்ளனர்.போதுமான படைகள் பயன்படுத்தப்படுகின்றன என்று தெரிவித்துள்ளார்.

    18:59 (IST)24 Feb 2020

    7 வயது சிறுமி பாலியல் கொலை வழக்கில் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி குற்றவாளி மனு

    7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி குற்றவாளி மனு தாக்கல் செய்துள்ளார். இதில், துடியலூர் மகளிர் காவல் ஆய்வாளர் 4 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    18:57 (IST)24 Feb 2020

    காவிரி டெல்டா வேளான் மண்டல சட்டத்தில் குறிப்பிட்ட தொழில்ககள் தொடங்க தடை

    வேளாண் மண்டல சட்டத்தில் குறிப்பிட்ட தொழில்கள் தொடங்க தடை விதிக்கப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

    சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில் தடை விதிக்கப்பட்டு அரசிதழ் வெளியிட்டப்பட்டுள்ளது

    18:51 (IST)24 Feb 2020

    டெல்லியில் நடந்த வன்முறைக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம்

    ராகுல் காந்தி வடகிழக்கு டெல்லியில் நடந்துள்ள வன்முறை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் அமைதியாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். வடகிழக்கு டெல்லியில் திங்கள்கிழமை நடந்த வன்முறை குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி: “இன்று டெல்லியில் நடந்த வன்முறைகள் கவலை அளிக்கின்றன. இந்த வன்முறை சம்பத்தை சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கப்பட வேண்டும். அமைதியான போராட்டங்கள் ஆரோக்கியமான ஜனநாயகத்தின் அடையாளம். ஆனால், வன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது. எந்த ஆத்திரமூட்டல் நிகழ்வுகள் இருந்தாலும் கட்டுப்பாடு, இரக்கம் மற்றும் புரிதலை காட்ட வேண்டும் என நான் டெல்லி குடிமக்களைக் கேட்டுக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

    18:29 (IST)24 Feb 2020

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தின் காலம் நீட்டிப்பு

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் மேலும் 4 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    18:05 (IST)24 Feb 2020

    சூப்பர் ஸ்டார் ரஜினியின் 168வது படம் அண்ணாத்த பெயர் அறிவிப்பு

    இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் 168வது படத்தின் பெயர் ‘அண்ணாத்த’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அண்ணாத்த டுவிட்டரில் வைரலாகி வருகிறது.

    17:50 (IST)24 Feb 2020

    டெல்லி மவுஜ்பூர்-பாபர்பூர் வன்முறை: வடகிழக்கு டெல்லி 144 தடை உத்தரவு

    வடகிழக்கு டெல்லியில் சில பகுதிகளில் நடைபெற்றுவரும் வன்முறை சம்பவங்கள் குறித்து டெல்லி காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், வடகிழக்கு மாவட்டத்தின் பகுதிகளில், குறிப்பாக மவுஜ்பூர், கர்தாம்பூரி, சந்த் பாக் மற்றும் தயால்பூர் பகுதிகளில் சில வன்முறை மற்றும் தீ விபத்துக்கள் பதிவாகியுள்ளன ... இது டெல்லி மக்களுக்கு குறிப்பாக வடகிழக்கு மாவட்டத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேண வேண்டும் என்றும் எந்தவொரு தவறான வதந்திகளையும் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. நிலைமையை மேலும் மோசமாக்கும் எந்தவொரு குழப்பமான படங்களையும் பரப்ப வேண்டாம் என்றும் ஊடகங்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

    17:47 (IST)24 Feb 2020

    டெல்லியில் பாஜகவின் கபில் மிஸ்ரா வன்முறையைத் தூண்டியதாக அசாதுதீன் ஒவைசி குற்றச்சாட்டு

    ஏஐஎம்ஐஎம் தலைவரும் ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி திங்கள்கிழமை, பாஜகவின் முன்னாள் எம்.எல்.ஏ. கபில் மிஸ்ராவின் பேச்சு வடகிழக்கு டெல்லியில் இரு குழுக்களுக்கு இடையே மோதல்களுக்கு வழிவகுத்துள்ளது. அவரை கைது செய்ய வேண்டும் என கூறியுள்ளார். வடகிழக்கு டெல்லியில் உள்ள மவுஜ்பூர்-பாபர்பூர் பகுதிகளில் இருந்து வன்முறை சம்பவங்கள் பதிவாகி வருவதால் ஓவைசி இதனை அறிவித்துள்ளார்.

    17:42 (IST)24 Feb 2020

    டெல்லி சிஏஏ ஆர்ப்பாட்டங்களில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்

    வடகிழக்கு டெல்லியின் மவுஜ்பூர்-பாபர்பூர் பகுதியில் திங்கள்கிழமை நடந்த சிஏஏ ஆர்ப்பாட்டங்களில் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

    16:55 (IST)24 Feb 2020

    டெல்லியில் மவுஜ்பூர்-பாபர்பூரில் சிஏஏ ஆதரவாளர்கள் - எதிர்ப்பாளர்கள் இடையே வன்முறை

    வடகிழக்கு டெல்லியில் தொடர்ந்து இரண்டாவது நாளாக வன்முறை மோதல்கள் ஏற்பட்டுள்ளது. குடியுரிமைச் சட்ட ஆதரவாளர்கள் மற்றும் குடியுரிமைச் சட்டம் எதிர்ப்பாளர்கள் இடையே திங்கள்கிழமை ஒருவருக்கொருவர் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க போலீஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீச வேண்டியிருந்தது. இதில் குறைந்தபட்சம் இரண்டு வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த கல்வீச்சில் காயமடைந்தவர்கள் ஜிடிபி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

    16:41 (IST)24 Feb 2020

    மவுஜ்பூரில் குடோன் எரியும் காட்சி

    16:38 (IST)24 Feb 2020

    போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசும் காவல்துறையினர்

    மவுஜ்பூரில் நிலைமை மிகவும் பதட்டமானதாக உள்ளது .  சிஏஏ சட்டத்தை ஆதரிபாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே கடுமையான மோதல்கள் நடந்து வருகின்றன . 

    16:36 (IST)24 Feb 2020

    சட்டம் ஒழுங்கு பாதுகாக்க வேண்டும் : டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால்

    வடகிழக்கு டெல்லியில் வன்முறை வெடித்துள்ள சூழ்நிலையில், டெல்லி துணைநிலை ஆளுநர்  அனில் பைஜால்  சட்டம் ஒழுங்கை பாதுகாக்குமாறு  டெல்லி போலீசாரைக்   கேட்டுக் கொண்டுள்ளார்.

    16:34 (IST)24 Feb 2020

    டெல்லி சிஏஏ போராட்ட வன்முறை, போலிஸ் கான்ஸ்டபிள் உயிரழப்பு

    வடகிழக்கு டெல்லியில் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக மோதல் சூழ்நிலையில் உள்ளது. இன்று நடைபெற்ற வன்முறையில்  தில்லி போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கொல்லப்பட்டார் . டெல்லி  டி.சி.பி உட்பட பலர் காயமடைந்தனர். குடியுரிமை திருத்த சட்டத்திற்கான ஆதரவாளர்கள்  மற்றும் குடியுரிமை எதிர்ப்பு சட்ட எதிர்ப்பாளர்கள் இடையே வடகிழக்கு டெல்லியில் நேற்று முதல் பதட்டமான சூழ்நிலை உருவாகி வருகிறது.   ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க போலிசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர்.   

    15:41 (IST)24 Feb 2020

    அதிமுக சார்பில் மருத்துவமுகாம் - முதல்வர் பார்வையிட்டார்

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு   அதிமுக  சார்பில் மருத்துவமுகாம் அமைக்கபப்ட்டது. இந்த மருத்துவமுகாமை  தமிழக முதல்வர் எடப்பாடி. பழனிசாமி பார்வையிட்டார். 

     

    15:32 (IST)24 Feb 2020

    ஏழு பேர் விடுதலை குறித்த தீர்மானம், ஆளுநருக்கு அனுப்பியுளோம்

    மறைந்த  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72 வது பிறந்தநாளை முன்னிட்டு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, " ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள  7 பேர் விடுதலையில் மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானம் முறையாக  தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளோம் என்று தெரிவித்தார்.  

    14:50 (IST)24 Feb 2020

    தமிழகத்தில் 20 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை

    கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு எஸ்.ஐ., வில்சன் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக கர்நாடக மாநிலம் உடுப்பியில் தௌஃபிக், அப்துல் சமீம் என்ற இருவரை தமிழக காவல்துறை கைது செய்தது. வில்சன் கொலை வழக்கு, என்ஐஏ அமைப்பிற்கு மாற்றப்பட்டது.

    இந்நிலையில, வில்சன் கொலை வழக்குத் தொடர்பாக தமிழகம் மற்றும் கர்நாடகா பகுதிகளில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.  சோதனை முடிவில் தான் முழு விவரங்கள் தெரியவரும் என்று நம்பப்படுகிறது.

    14:10 (IST)24 Feb 2020

    சிவந்தி ஆதித்தனார் மணி மண்டபத்தை பார்வையிட்டார் எம்.பி. கனிமொழி

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தை பார்வையிட்டார் அத்தொகுதி எம்.பி. கனிமொழி. மணி மண்டபத்தில் அமைந்திருக்கும் சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பத்திரிக்கை, விளையாட்டு துறைகளில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியவர் அவர் என்று பேச்சு.

    13:47 (IST)24 Feb 2020

    ரியோ ஓப்பன் டென்னிஸ்

    பிரேசில் நாட்டில் அமைந்திருக்கும் ரியோ டி ஜெனரியோவில் நடைபெறும் ரியோ ஓப்பன் டென்னிஸில் இத்தாலிய வீரர் ஜியான்லூகா மேகரை வீழ்த்தி சிலி வீரர் க்றிஸ்டியன் கரின் வெற்றி பெற்றுள்ளார். இந்த போட்டியில் வெற்று பெற்றதால் கரின் முதல் 20 வீரர்களுக்கான பட்டியலில் இணைந்தார்.

    12:36 (IST)24 Feb 2020

    பதவி விலகினார் மலேசிய அதிபர் மகாதீர் முகமது

    மலேசிய அதிபர் மகாதீர் முகமது இன்று பதவி விலகினார். அவருடைய ராஜினாமா கடிதத்தை அந்நாட்டு மன்னரிடம் அளித்தார் மகாதீர்

    12:32 (IST)24 Feb 2020

    கலை அறிவியல் கல்லூரிகளாக மாற்றப்படும் பொறியியல் கல்லூரிகள்

    தமிழகத்தில் உள்ள 30-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளை கலை அறிவியல் கல்லூரிகளாக மாற்ற கல்லூரி நிர்வாகம் முயற்சி மேற்கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

    12:24 (IST)24 Feb 2020

    பொது இடங்களில் புகைப்பிடித்தால் அதிக அபராதம் - டாக்டர் ராமதாஸ் வரவேற்பு

    பொது இடங்களில் புகைப்பிடித்தால் அதிக அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு எடுத்துள்ள முடிவு வரவேற்க தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

    11:57 (IST)24 Feb 2020

    ஏரி குளங்களில் மூழ்கி ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

    ஏரி மற்றும் குளங்களில் மூழ்கி ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன என்பது தொடர்பாக அறிக்கையை அளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது உயர் நீதிமன்றம். அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் நேரில் ஆஜராக நேரிடும் என்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    11:42 (IST)24 Feb 2020

    அயனாவரம் பாலியல் வன்கொடுமை வழக்கு

    அயனாவரம் பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்பினை எதித்து 2 குற்றவாளிகள் மேல்முறையீட்டு மனுவினை தாக்கல் செய்துள்ளனர். இந்த மேல்முறையீட்டு மனு தொடர்பாக பதில் அளிக்க அயனாவரம் மகளிர் காவல் ஆய்வாளர் 4 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

    11:20 (IST)24 Feb 2020

    ஜெயலலிதா சிலைக்கு மரியாதை

    சென்னை அதிமுக தலைமைச் செயலகத்தில் அமைந்திருக்கும் ஜெயலலிதா சிலைக்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் கட்சியின் பல்வேறு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    11:00 (IST)24 Feb 2020

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - 19ம் கட்ட விசாரணை துவங்கியது

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான ஒரு நபர் ஆணையத்தின் 19ம் கட்ட விசாரணை இன்று துவங்கியது. விசாரணைக்கு ஆஜராக நடிகர் ரஜினிகாந்த் உட்பட 31 பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளது விசாரணை ஆணையம். நேரில் ஆஜராவதில் இருந்து ரஜினிக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று கோரப்பட்ட மனு மீதான முடிவினையும் ஆணையம் இன்று எடுக்க இருப்பதாக அறிவிப்பு.

    10:57 (IST)24 Feb 2020

    வெளியானது தலைவி படத்தின் புதிய போஸ்டர்

    எம்.ஜி.ஆரின் பிறந்த நாளுக்கு அரவிந்த் சாமியின் போஸ்டரை வெளியிட்டது போன்றே தலைவி படக்குழு தற்போது ஜெயலலிதாவின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு கங்கனா ரனாவத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.

    10:46 (IST)24 Feb 2020

    ரூ. 33 ஆயிரத்தை நெருங்கும் ஒரு சவரன் தங்கம்

    சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 224 உயர்ந்துள்ளது. தற்போது ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 4,100 ஆகும். ஆபரண தங்கம் ரூ. 32,800க்கு விற்பனையாகிறது.

    10:39 (IST)24 Feb 2020

    நலத்திட்ட உதவிகளை துவங்கி வைத்தார் முதல்வர்

    மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுவதை ஒட்டி தலைமை செயலகத்தில் பெண் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளை துவங்கி வைத்தார் முதல்வர்.

    10:33 (IST)24 Feb 2020

    தமிழகத்திற்கு முன் கூட்டியே தேர்தல் நடக்க வாய்ப்பில்லை

    தமிழக சட்டப்பேரவைக்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.

    10:18 (IST)24 Feb 2020

    ஜெயலலிதா பிறந்த நாள் - 72 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த தினத்தை ஒட்டி 72 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளது தமிழக அரசு. தலைமை செயலகம் அருகே மகிழம் மரத்தினை நட்டுவைத்தார் முதல்வர் பழனிசாமி.

    10:07 (IST)24 Feb 2020

    பவானி சாகர் அணை நிலவரம்

    ஈரோடு பவானி சாகர் அணையின் நீர் மட்டம் 97.56 அடியாக உள்ளது. நீர் இருப்பு 26.8 டி.எம்.சி, நீர் வரத்து 323 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 1000 கன அடியாகவும் உள்ளது.

    10:05 (IST)24 Feb 2020

    ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மரியாதை

    சென்னை க்ரீன்வேஸ் இல்லத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    காயல்பட்டினத்தில் என்.ஐ.ஏ சோதனை :  தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள காயல்பட்டினம் என்ற இடத்தில் இன்று காலையில் இருந்து என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சிறப்பு காவல் அதிகாரி வில்சன் கன்னியாகுமரி மாவட்டத்தின் களியக்காவிளை சோதனைச் சாவடியில் ஷமீம் மற்றும் தௌஃபிக் ஆகியோர் சுட்டுக் கொன்றனர். இவ்விரு நபர்களும் திருச்செந்தூரில் மொய்தீன் ஃபாத்திமா என்பவர் வீட்டில் தங்கி இருந்ததாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
    Tamil Nadu Tamilnadu Weather
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment