Tamil Nadu news today updates dlf downtown : சென்னை தரமணி பகுதியில் ரூ. 5000 கோடி மதிப்பிலான ஐ.டி. நிறுவனம் அமைப்பதற்கான அடிக்கல்லை நாட்டினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. டி.எல்.எஃப் தனியார் நிறுவனமும், தமிழக அரசின் டிட்கோ துறையும் இணைந்து உருவாக்கும் திட்டம் 6 ஆண்டுகளில் நிறைவடையும் என்றும் இதனால் நேரடியாக 70 ஆயிரம் நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிட்டும் என்று நேற்றைய நிகழ்வில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இது தொடர்பான முழுமையான தகவல்களை அறிந்து கொள்ள இந்த இணைப்பை படியுங்கள்
ரூ 40க்கு தோசை விற்கும் தோச மாமா
சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் வசித்து வரும் ரவிச்சந்திரன் என்பவர் கடந்த 9 ஆண்டுகளாக பாரதி டிஃபன் செண்டர் நடத்தி வருகிறார். இங்கு விதவிதமாக கிடைக்கும் தோசைகளில் மிகவும் முக்கியமானது பூண்டு தோசை தான்... இந்த தோச மாமா குறித்து வீடியோவை பார்த்து அறிந்து கொள்ளுவோம் வாங்க!
5 மற்றும் 8 பொதுத்தேர்வுகளுக்கான கட்டணங்கள் அறிவிப்பு
5 மற்றும் 8 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த தேர்வினை எழுத இருக்கும் மாணவர்களுக்கான கட்டணங்களை அறிவித்தது கல்வி இயக்குநரகம். தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த கட்டணங்கள் ஏதும் இல்லை. இது தொடர்பான முழுமையான தகவல்களை படிக்க
Live Blog
Tamil Nadu news today updates : இன்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளைப் படிக்க இந்த இணைப்பில் இணைந்திருங்கள்
இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி குறைந்திருப்பது தற்காலிகமானதே என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டாலினா ஜியார்ஜிவா தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் தாவோஸ் நகரில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய அவர், அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தக போர் தணிந்து, முதல் கட்ட ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பது உள்ளிட்ட விவகாரங்கள் பொருளாதார வளர்ச்சியில் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார்.
எனினும், உலக அளவில் 3.3 சதவீதம் என்ற வளர்ச்சி விகிதம் பொருளாதாரத்திற்கு சிறப்பானது அல்ல என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி மந்தமடைந்திருப்பது தற்காலிகமானதே என்றும், பொருளாதார வளர்ச்சி வேகமெடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
2017ல் நடைபெற்ற குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடு நடைபெற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
2017ல் நடைபெற்ற குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடு!https://t.co/5wMBD3XmPb | #TNPSC | #Group2AExam pic.twitter.com/qZWQr5PR6S
— News7 Tamil (@news7tamil) January 24, 2020
மதுரை : விரகனூர் ரிங்ரோடு - பி.டி.ஆர்.பாலம் வரை உள்ள சாலைகள் வைகை ஆற்றை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய குழு அமைத்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் கழிவு நீர், வைகை ஆற்றில் கலக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்து பிப்.3ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு.
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக கைதான 3 பேர் மீது 14 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.
டிபிஐ அலுவலக உதவியாளர் ரமேஷ், 2017இல் குரூப்-2(ஏ) தேர்வில் வெற்றிபெற்ற திருக்குமரன், தேர்வாளர் நிதிஷ்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு.
குரூப்-4 முறைகேட்டில் ராமேஸ்வரம், கீழ்க்கரை தேர்வு மையங்களில் பொறுப்பில் இருந்த சில அரசு அதிகாரிகளுக்கும் தொடர்பு.
தேர்வர்கள் சிலரை இடைத்தரகர்கள் அணுகி பணம் பெற்றுக்கொண்டு விடைத்தாள்களில் முறைகேடு.
குரூப்-4 தேர்வில் கீழ்க்கரை, ராமேஸ்வரம் மையங்கள் தவிர வேறு எங்கும் முறைகேடு இல்லை.
வழக்கில் முக்கிய பங்காற்றியவர்கள், இடைத்தரகர்கள் பற்றியும் பல கோணங்களில் விசாரணை.
- சிபிசிஐடி
ரஜினி மீதான புகார்கள் மீது ஒரு வாரத்திற்கு பிறகு காவல்துறை எஃப்ஐஆர் பதிவு செய்யத் தவறினால் மீண்டும் நீதிமன்றத்தை அணுகுவோம் என்று திராவிடர் விடுதலைக் கழகம் அறிவித்துள்ளது. மேலும், பெரியாரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசிய ரஜினியின் மீது சட்ட நடவடிக்கைகள் பாயும் வரை சட்டப் போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் தேர்தல் செல்லாது என்று ரத்து செய்து தீர்பளித்தது. புதிதாக தேர்தலை நடத்த உத்தரவிட்டது. இதையடுத்து, தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து விஷால் தரப்பினர் மேல் முறையீடு செய்யப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன்: காஞ்சிபுரத்தில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது, சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தலை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததொடு புதிதாக தேர்தல் உத்தரவிட்டது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஐசரி கணேஷ்: நடிகர் சங்க கட்டிடம் கட்டப்பட்டு நாடக நடிகர்கள் பயன் பெற வேண்டும். முறையற்ற வகையில் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். புதிதாக நடக்கவிருக்கும் தேர்தல் நியாயமான முறையில் நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறினார்.
டிஜிபி திரிபாதி: தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்தும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். செங்கல்பட்டு அருகே கலியப்பேட்டையில் பெரியார் சிலையை சேதப்படுத்திய நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
பிரேசில் அதிபர் ஜெய்ர் மெசியாஸ் போல்சனாரோ 4 நாள் அரசுமுறைப் பயணமாக அவர் இன்று இந்தியா வந்துள்ளார். டெல்லி விமான நிலையத்திற்கு வருகை தந்த அவரை அதிகாரிகள் வரவேற்றனர். குடியரசு தின அணிவகுப்பு 2020-இல் அவர் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்.
Delhi: President of Brazil, Jair Messias Bolsonaro arrives at Delhi airport. He is on a 4-day visit to India. He is the Chief Guest of #RepublicDay Parade 2020. pic.twitter.com/mpngbUxVav
— ANI (@ANI) January 24, 2020
செங்கல்பட்டு அருகே பெரியார் சிலை சேதப்படுத்தப் பட்டிருப்பது குறித்து கருத்து தெரிவித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: ரியார் சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. குற்றவாளிகள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த ஆண்டு ஜுன் 23-ம் தேதி நடத்தப்பட்டது. தேர்தலை ரத்து செய்யக்கோரி ஏழுமலை என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதனிடையே, நடிகர் சங்க நிர்வாகத்தை கவனிக்க பதிவுத்துறை உதவி ஐஜி-யை நியமித்ததை எதிர்த்து, நடிகர்கள் நாசர் மற்றும் கார்த்தி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குள் அனைத்தையும் விசாரித்த நீதிபதி கல்யாணசுந்தரம், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
இந்நிலையில் இந்த வழக்குகள் மீது இன்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதில், நடிகர் சங்கத் தேர்தலை ரத்து செய்தும் புதிய தேர்தல் நடத்தவும் உத்தரவிட்டார்.
குடியுரிமைக்கான ஆதாரத்தை அரசு கேட்பதால் அதை வேண்டி உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் சுடுகாட்டில் உள்ள தனது முன்னோர்களிடம் சமாதியில் காங்கிரஸ் நிர்வாகி ஹசீப் அஹமது பிரார்த்தனை செய்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும், போராட்டம் நடந்து வரும் நிலையில், சுடுகாட்டில், காங்கிரஸ் நிர்வாகி இந்த வழிபாட்டை மேற்கொண்டார்.
செங்கல்பட்டு பகுதியில் பெரியார் சிலை உடைக்கப்பட்டதை தொடர்ந்து பலரும் தங்களின் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்ற நிலையில் சிலை உடைப்பு கண்டிக்கத்தக்கது என்றும் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முக ஸ்டாலின் அறித்துள்ளார்.
பெரியார் குறித்து சர்ச்சையாக பேசிய ரஜினிக்கு எதிராக திராவிடர் கழகம் சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் அளித்த பிறகு மீண்டும் ஏன் நீதிமன்றத்தை நாட வேண்டும் என்று கேள்வி எழுப்பியது நீதிமன்றம். இதனைத் தொடர்ந்து மனுக்கள் வாபஸ் பெறபட்டதால் வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டது.
வெல்டன் டிஜிட்டல் இந்தியா என்று இந்தியாவில் நடைபெறும் இணைய துண்டிப்பு குறித்து எம்.பி கனிமொழி ட்வீட் செய்துள்ளார்.
Well Done 'Digital India' !#internet pic.twitter.com/EMjQX7dPsh
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) January 24, 2020
பாலியல் புகாரில் நித்தியானந்தாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. லெனின் கருப்பன் தொடர்ந்த வழக்கில் கர்நாடக அரசு பதில் அளிக்கவும், ஒரு வாரத்தில் நித்தியானந்தா பதில் அளிக்கவும் உத்தரவு.
போட்டித் தேர்வுகள் நியாயமான முறையில் நடைபெறும் என்ற நம்பிக்கையில் தேர்வு எழுதிய மாணவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். முறைகேடுகள் இல்லாத நியாயமான தேர்வுகள் நடைபெறுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனம் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
சி.ஏ.ஏ மற்றும் என்.பி.ஆர் சட்டங்களுக்கு எதிராக திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் கூட்டம் நடைபெற்று வருகிறது. கே.எஸ்.அழகிரி, வைகோ, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன், காதர் மொய்தீன், ஜவாஹிருல்லா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
குரூப் 4 முறைகேடு விவகாரம் தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களில் தேர்வுகள் எழுதிய 99 பேருக்கும் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது டி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு பதில் தகுதியான நபர்களை தேர்வு செய்ய முடிவு.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights