தனியார் வங்கிகளில் சிறந்த வங்கி சேவையை அளித்துக் கொண்டிருக்கும் ஐசிஐசிஐ மற்றும் எச்டிஎப்சி வங்கிகளில் சேவிங் அக்கவுண்ட், டெபாசிட் தவிர பணத்தை சேமிக்கும் வகையான மற்றொரு சிறந்த திட்டமும் உள்ளது. நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?
வங்கிகளில் மாதந்தோறும் முதலீடு செய்து அதன் மூலம் குறிப்பிட்ட தொகையை லாபமாக பெற்றுத் த்ரக்கூடிய ஒரு திட்டம் தான் தொடர் வைப்பு நிதி திட்டம் எனப்படும் ரெக்கரிங் டெப்பாசிட்.
மிஸ் பண்ணாதீங்க.. பெர்சனல் லோன் பெறுவது மிக மிக சுலபம்.
இதன் மூலம் என்ன பலன் என்று கேட்கிறீர்களா? இந்த கணக்கில் நீங்கள் சேமிக்கும் தொகைக்கு மற்ற செமிப்பு கணக்கில் கிடைக்கும் லாபத்தைவிட 1 சதவீதம் அதிகப்படியான வட்டிவிமிதம் கிடைக்கும். அதே போல் உங்களுக்கு தேவைப்படும்போது நீங்கள் முழு பணத்தையோ அல்லது குறிப்பிட்ட தொகையை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.
படியுங்கள்... ணத்தை சேமிக்க சிறந்த இடம் வங்கியா? போஸ்ட் ஆபிஸா?
மீதமுள்ள பணம் வழக்கம் போல் சேமிப்பு கணக்கில் சேர்ந்துவிடும். சரி இந்த தொடர் வைப்பு நிதிக்கு எந்த வங்கி சிறந்தது? என சந்தேகம் உங்களுக்கு எழலாம். அதை தீர்க்கும் வகையில் கீழே 2 முன்னணி வங்கிகளில் செயல்படும் தொடர் வைப்பு நிதி குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
1. ஐசிஐசிஐ வங்கி:
ஐசிஐசிஐ வங்கியில் 6 மாதம் முதல் 10 வருடம் வரை தொடர் வைப்பு நிதி திட்டத்தின் கீழ் முதலீடு செய்யலாம். இத்திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு அவர்கள் தேர்ந்தெடுக்கும் காலத்தைப் பொருத்து 7.75 சதவீதம் முதல் 8.50 சதவீதம் வரை வட்டி விகிதம் அளிக்கப்படும்.
மேலும் படிக்க.. புகழ்பெற்ற வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம்
அதே நேரம் மூத்த குடிமக்களுக்கு 8.25 சதவீதம் முதல் 9 சதவீதம் வரை வட்டி அளிக்கப்படும். முதலீடு செய்யும் போது மாதத் தவணையை காலதாமதமாக செலுத்தினால் 1000 ரூபாய்க்கு 12 ரூபாய் அபராதமாகச் செலுத்த வேண்டும்.
2. எச்டிஎப்சி வங்கி:
எச்டிஎப்சி வங்கியில் ஐசிஐசிஐ வங்கியைப் போன்றே 6 மாதம் முதல் 10 வருடம் வரை தொடர் வைப்பு நிதி திட்டத்தின் கீழ் முதலீடு செய்யலாம். இத்திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு அவர்கள் தேர்ந்தெடுக்கும் காலத்தைப் பொருத்து 8 சதவீதம் முதல் 8.50 சதவீதம் வரை வட்டி விகிதம் அளிக்கப்படும்.
தெரிந்துக் கொள்ளுங்கள்... எஸ்பிஐ வங்கியின் சூப்பர் டூப்பர் அறிவிப்பு.
அதே நேரம் மூத்த குடிமக்களுக்கு 0.50 சதவீத வட்டி அளிக்கப்படும். முதலீடு செய்யும் போது மாதத் தவணையை செலுத்த காலதாமதமாகச் செலுத்தினால் 30/360 என்ற நாள் கணக்கில் அபராதம் செலுத்த வேண்டும்.
படியுங்கள்...வீட்டில் இருந்தப்படியே வங்கியில் கணக்கை தொடரலாம்!