கேரளா மழை ( Kerala Floods 2018) : கேரளாவில் தென்மேற்கு மழை தொடர்ந்து தீவிரமடைந்து வருவதால், மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக மாறிவருகிறது.
தொடர்ந்து மீட்புப் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேரளாவில் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் வந்து ஆய்வு செய்துவிட்டுச் சென்றார். அதிகாலையிலேயே திருவனந்தபுரத்தில் நரேந்திர மோடி கேரள முதலமைச்சர் மற்றும் இதர அமைச்சர்களை நேரில் சந்தித்தார். வரலாறு காணாத மழைக்கு இதுவரை சுமார் 324 நபர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மீட்புப் பணி நிலவரம் பற்றி அறிந்து கொள்ள
வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் கூடுதலாக 23 ஹெலிகாப்டர்கள் மற்றும் 200 மோட்டார் படகுகள் பேரிடர் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்படும் என்றும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
நேற்று நள்ளிரவு டெல்லியில் இருந்து திருவனந்தபுரம் வந்த பிரதமர் நரேந்திர மோடி தற்போது கொச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதியினை பார்வையிட இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
நேற்று மட்டும் சுமார் 82,000 நபர்களை வெள்ளம் சூழந்த பகுதிகளில் இருந்து மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் எட்டாம் தேதியில் இருந்து இதுவரை இந்த வெள்ளத்திற்கு சுமார் 173 நபர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் (17/08/2018) 31 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
03.30 pm : கேரளாவில் தற்போது பெய்தது வரலாறு காணாத மழை என வானிலை ஆய்வு மையம் அறிக்கை. அது தொடர்பான முழுமையான செய்தியினைப் படிக்க
02.30 pm : கேரளாவில் ஏற்பட்ட வரலாறு காணாத மழையினால் ஏற்பட்ட இழப்புகள் அதிகம். இதுவரை ஏற்பட்ட இழப்புகள் குறித்து ஒரு காணொளி
02.15 pm : ஆம் ஆத்மி சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் ஒரு மாத சம்பளத்தை கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு நிவாரண நிதியாக அளிப்பார்கள் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
All AAP MLAs, MPs and ministers donating one month salary for Kerala
— Arvind Kejriwal (@ArvindKejriwal) 18 August 2018
02.00 pm : ஹரியானா முதல்வரைத் தொடர்ந்து பிஹார் முதல்வர் நிதீஷ் குமார் 10 கோடி ரூபாய் கேரளாவிற்கு வெள்ள நிவாரண நிதியாக வழங்கி உள்ளார்.
01.30 pm : கேரள மக்களுக்கு தேவையான குடிநீரை தொடர்வண்டி வழியாக கொடுத்தனுப்பிய மகாராஷ்ட்ரா மாநிலம். 7 லட்சம் லிட்டர் குடிநீரை புனேவில் இருந்து இன்று அனுப்பியது அம்மாநிலம்.
12.30 pm : கேரளாவிற்கு 10 கோடி ரூபாய் நிதியுதவி அளித்து ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் அறிவிப்பு. தமிழக அரசு சார்பாக ஏற்கனவே 5 கோடி ரூபாய் கேரளாவிற்கு கொடுக்கப்பட்ட நிலையில் மீண்டும் 5 கோடி ரூபாய் நிதி உதவி அளித்து அறிவித்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
Haryana Chief Minister Manohar Lal Khattar has announced an aid of Rs 10 crores for flood-hit Kerala. #KeralaFloods (File pic) pic.twitter.com/qiNRwwxFMG
— ANI (@ANI) 18 August 2018
வங்கக் கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியிருப்பதால் இன்றும் நாளையும் கேரளத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கொச்சியில் தற்போது கனமழை பெய்து வருகிறது. மத்திய கேரள மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது.
Just in: Rain intensifies in Kochi and central districts, IMD scientist in Trivandrum says a circulation has formed in north Bay of Bengal which will have an impact on Kerala, heavy rain to continue today and tomorrow @IndianExpress #KeralaFloods
— Vishnu Varma (@VishKVarma) 18 August 2018
11.00 am: கேரள மக்களுக்கு உதவ விரும்புகிறீர்களா?
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவ விரும்புகிறீர்களா?
10.45 am: கேரளா மழை வெள்ளத்தால் மிகவும் மோசமான பாதிப்பினை சந்தித்துள்ளது. அதனால் முதல்கட்ட நிவாரண நிதியாக 2000 கோடி ரூபாய் கேட்டு உயர்மட்டக் குழு ஆலோசனையில் பிரதமரிடம் பினராயி விஜயன் கேட்டுள்ளார். உடனடி நிதியாக ரூபாய் 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து பிரதமர் அறிவித்திருப்பதாக கேரள முதல்வர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
10.00 am : மோசமான வானிலை நிலவுவதால் மோடியின் மேற்பார்வை ரத்தானது. கொச்சி விமான நிலையம் முழுவதும் நீர் சூழ்ந்துள்ளதால் டெல்லி திரும்ப காலதாமதம் ஆகலாம். இதற்கிடைப்பட்ட நேரத்தில் ராணுவம் மற்றும் கப்பற்படை மேலதிகார்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் நரேந்திர மோடி.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook
Web Title:Prime minister narendra modi left from thiruvananthapuram this morning to undertake an aerial survey of flood affected districts
‘நடமாடும் நகைக்கடை’ தயாரிக்கும் படத்தில் வனிதா: கதை இதுதானா?
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி : மத்திய அரசு அறிவுறுத்தல்
தமிழகம், புதுச்சேரி சட்டசபை தேர்தல் : பணிக்குழு பட்டியலை அறிவித்த காங்கிரஸ்
வன்னியர்கள் இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு : உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
டாப்-5 சீரியல்களில் மெஜாரிட்டி சன் டிவி பக்கம்: எந்தெந்த சீரியல்கள் தெரியுமா?
தவறாக மொழிபெயர்த்த ஹெச்.ராஜா… கண்டுபிடித்து திருத்திய அமித் ஷா!