IRCTC: மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையிலான இந்தியன் ரயில்வே 12 மே 2020 முதல் 15 ஜோடி சிறப்பு குளிரூட்டப்பட்ட ரயில் சேவைகளை இயக்கி வருகிறது. இது தவிர தேசிய போக்குவரத்தான இந்தியன் ரயில்வே பல Shramik சிறப்பு ரயில்களையும் 1 மே 2020 முதல் இயக்கி வருகிறது. இந்த ரயில்களுடன் கூடுதலாக 200 குளிரூட்டப்படாத சாதாரண ரயில் சேவைகளையும் ஜுன் 1 முதல் இயக்கப்போவதாக ரயில்வே அமைச்சரகம் சமீபத்தில் அறிவித்துள்ளது. இருப்பினும் பயணிகளின் வசதிக்காக இந்த 15 ஜோடி சிறப்பு குளிரூட்டப்பட்ட ரயில்களில் சில பயணச்சீட்டு முன்பதிவு விதிகளை திருத்த உள்ளதாக அமைச்சரகம் முடிவு செய்துள்ளது.
மே 12 முதல் ஐஆர்சிடிசி சிறப்பு ரயில்கள்: புதிய பயணச்சீட்டு முன்பதிவு, RAC, காத்திருப்பு பட்டியல் முன்பதிவு கால விதிகள்
தற்போது உள்ள 7 நாட்களில் இருந்து, இந்த சிறப்பு குளிரூட்டப்பட்ட ரயில்களின் Advance Reservation Period (ARP) 30 நாட்களாக அதிகரிக்கப்படும்.
காதுகளை பதம் பார்க்கும் முக கவசம்? பாதுகாக்க ஒரு வழி
இந்த சிறப்பு குளிரூட்டப்பட்ட ரயில்களுக்கு தட்கல் முன்பதிவு வசதி இருக்காது.
இந்த சிறப்பு ரயில்களில் RAC / காத்திருப்பு பட்டியல் ரயில் பயணச்சீட்டுகள் பொருந்தக்கூடிய தற்போதைய அறிவுறுத்தல்களின்படி வழங்கப்படும். இருப்பினும், தற்போதுள்ள அறிவுறுத்தல்களின்படி, காத்திருப்பு பட்டியலில் உள்ள பயணிகள் இந்த ஏசி சிறப்பு ரயில்களில் ஏற அனுமதிக்கபட மாட்டார்கள்.
30 நிமிடங்கள் என்ற முந்தைய நடைமுறையைப்போல் அல்லாமல், முதல் சார்ட் (first chart) ரயில் புறப்படுவதற்கு குறைந்தது 4 மணி நேரத்துக்கு முன்பு உருவாக்கப்படும். மேலும் இரண்டாவது சார்ட் ரயில் புறப்படுவதற்கு குறைந்தது 2 மணி நேரத்திற்கு முன்பு உருவாக்கப்படும்.
இந்த ரயில்களுக்கான தற்போதைய முன்பதிவு (current booking) வசதி முதல் மற்றும் இரண்டாவது சார்ட்களுக்கு இடையில் அனுமதிக்கப்படும்.
எந்த விஷயத்தையும் அதன் இயல்புக்காக பாராட்டுங்கள்
இந்த சிறப்பு ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு, கணினிமயமாக்கப்பட்ட பயணிகள் முன்பதிவு சேவை கவுண்டர்கள் (PRS counters), Yatri Ticket Suvidha Kendra (YTSK) licensees, தபால் நிலையங்கள் ஆகியவற்றின் மூலம் மேற்க்கொள்ளப்படும். இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக (Indian Railway Catering and Tourism Corporation -IRCTC) அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மற்றும் பொது சேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
திருத்தப்பட்ட இந்த பயணச்சீட்டு முன்பதிவு விதிகள் ரயில் முன்பதிவு தேதி 24 மே முதல் மற்றும் ரயில் புறப்படும் தேதி மே 31 முதல் நடைமுறைக்கு வரும், என ரயில்வே அமைச்சகம் கூறியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil