Abdul Kalam

1931 ஆம் ஆண்டு, அக்டோபர் 15 அன்று ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக தமிழ்நாடு மாநிலம் ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் (Abdul Kalam) பிறந்தார். இவர் ஒரூ இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர். இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால், இளம் வயதிலே குடும்ப வருமானத்திற்காக வேலைக்கு சென்றார். பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் இவர் செய்தித்தாள்கள் விநியோகம் செய்தார்.

பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, திருச்சியிலுள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் இயற்பியல் பயின்றார். 1954ஆம் ஆண்டு, இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். ஆனால், இயற்பியல் துறையில் ஆர்வம் இல்லை என உணர்ந்தவர், விண்வெளி பொறியியல் பட்டத்தை சென்னை எம்.ஐ.டி-யில் பெற்றார்.

1960 ஆம் ஆண்டு DRDO-வில் விஞ்ஞானியாக இணைந்தார். அப்போது, ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார். பின்னர், இஸ்ரோவில் தனது ஆராய்ச்சிப் பணிகளைத் தொடர்ந்தார். 1980 ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்ததில் கலாமின் பங்கு முதன்மையானது. இதற்காக மத்திய அரசு கலாமுக்கு 1981 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கியது.1999 ஆம் ஆண்டில் பொக்ரான் அணு ஆயுத சோதனையில் முக்கிய பங்காற்றியுள்ளார். அக்னி சிறகுகள், இந்தியா 2020, எழுச்சி தீபங்கள், அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை என 4 நூல்களையும் எழுதியுள்ளார்.

2002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக பதவியேற்றார். குடியரசு தலைவர் பதவியில் அமரும் முன்பே இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது கலாமுக்கு அளிக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த கலாம் ‘மக்களின் ஜனாதிபதி’ என்று அன்போடு அழைக்கப்பட்டார்.

ஜூலை 27, 2015 ஷில்லாங்கில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் மேடையில் உரையாற்றிக்கொண்டிருந்தபோதே மயக்கமடைந்து விழுந்து காலமானார்.

அப்துல் கலாமின் மணிமண்டபம் அவரது சொந்த ஊரான ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பு இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல்,கலாம் வாழ்ந்து மறைந்த அவரது சொந்த வீடு மக்களின் பார்வைக்காக கலாம் இல்லம் எனும் பெயரில் காட்சியமாக மாறியுள்ளது.

உலகம் போற்றும் விஞ்ஞானியான கலாம் தன்னுடைய பொன்மொழிகளாலும், கவிதைகளாலும், வாசகங்களாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
Read More

Abdul Kalam News

BEST Places to Visit in Rameswaram in tamil
அரியமான் பீச் முதல் அரிச்சல் முனை வரை… ராமேஸ்வரத்தில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இருக்கு!

ஒருபுறம் அமைதியான கடலையும், மறுபுறம் ஆர்ப்பரிக்கும் அலைகள் கொண்ட கடலையும் தனக்கு கிடைத்த வரமாக பெற்றுள்ளது ராமேஸ்வரம் தீவு.

அப்துல் கலாம் பிறந்தநாள் ஏன் உலக மாணவர் தினமாக கொண்டாடப்படுகிறது?

கனவு காணுங்கள் – கனவுகளிலிருந்து  சிந்தனைகள் பிறக்கும் – சிந்தனைகள் செயல்களாகும் – என இளைஞர்களுக்கு என்றும் வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் அப்துல் கலாம்.

அப்துல் கலாம் 5வது ஆண்டு நினைவு தினம்; தலைவர்கள் அஞ்சலி

முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் மறைந்த 5வது ஆண்டு நினை நாளில் பிரதமர் மோடி, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர்…

”சூரியனைப் போல் மிளிர, அதைப் போல் எரிய வேண்டும்” – நெட்டிசன்கள் நினைவுக் கூர்ந்த அப்துல் கலாம் பிறந்தநாள்!

Abdul Kalaam Birth Anniversary: முன்னாள் ஜனாதிபதி எழுதிய புத்தகங்களிலிருந்து மேற்கோள்களைப் பகிர்ந்து, அவரை நினைவுக் கூர்ந்தனர்.

சர்வேதேச மாணவர்கள் தினம் : அக்டோபர் 15ல் கொண்டாட காரணம் என்ன ?

விங்ஸ் ஆஃப் ஃபயர்’, ‘மை ஜர்னி’ ‘பற்றவைக்கப்பட்ட மனங்கள்’  ‘இந்தியா 2020′ போன்ற புத்தகங்களின் மூலம் தனது எழுத்து திறமையையும் உலகத்திற்கு வித்திட்டார்

இராமேஸ்வரத்தில் இருந்து சில்லாங் வரை பறந்த அக்கினி சிறகு அப்துல் கலாம்…

Abdul Kalam Quotes in Tamil : இராமேஸ்வரம் முதல் சில்லாங் வரை பறந்த அக்கினி சிறகு அவுல் பகீர் ஜயினுலாப்தீன் அப்துல் கலாம் பிறந்தநாள் இன்று.…

அப்துல் கலாமுக்கு பள்ளி மாணவர்கள் மனற்சிற்பம் மூலம் புகழாஞ்சலி!!

அப்துல் கலாமின் உருவப்படத்தை மனற்சிற்பத்தில் வடிவமைத்து பள்ளி மாணவர்கள் அவருக்கு புகழாஞ்சலி செலுத்தியுள்ளனர்.

2025-க்குள் அப்துல் கலாம் கனவு கண்ட இந்தியா : மணிமண்டபம் திறப்பு விழாவில் மோடி பேச்சு

2025-க்குள் அப்துல் கலாம் கனவு கண்ட வளர்ச்சிமிக்க இந்தியாவை உருவாக்குவோம் என மணிமண்டபம் திறப்பு விழாவில் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

அப்துல் கலாம் மணிமண்டபம்: பிரதமர் மோடி இன்று திறப்பு!!

முன்னாள் குடியரசுத் தலைவர், ஏவுகணை நாயகன் அப்துல் கலாமின் மணிமண்டபத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கவுள்ளார்.

அப்துல் கலாம் மணி மண்டபம் : வியப்பில் ஆழ்த்தும் விஷூவல் காட்சிகள்

அப்துல் கலாம் மணிமண்டபத்தில் அக்னி ஏவுகணையின் மாதிரி வடிவம், செயற்கைகோள் மாதிரி, கலாமின் புகைப்படங்கள், ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன.