மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு சத்தான உணவுகளை உன்பது மிக அவசியம். இதில் இந்திய காய்கறிகள், பழங்கள், மசாலாப் பொருட்கள் மற்றும் மூலிகைகள் நன்மைக்கான சக்தியாக அறியப்படுகின்றன. ஏனெனில் அவை ஆரோக்கியமானவை மட்டுமல்ல, இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகின்றன. அத்தகைய ஒரு பழம் அம்லா அல்லது இந்திய நெல்லிக்காய் ஆகும்.
இது முடி உதிர்தல், செரிமானம் மற்றும் பலவற்றில் கண்பார்வை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல வாழ்க்கை முறை பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க பயனுள்ளதாக கருதப்படுகிறது
ஆனால், நெல்லிக்காயை உண்பதில் பல்வேறு விதங்கள் இருப்பது உங்களுக்கு தெரியுமா?
அத்தகைய மருத்துவ குணம் கொண்ட பழத்தை, அன்றாட உணவு முறையில் சேர்ப்பது குறித்து விளக்குகிறார் ஆயுர்வேத பயிற்சியாளர் டாக்டர் டிக்சா பாவ்சர்.
அம்லாவை பச்சையாகவோ, ஊறுகாய் வடிவிலோ, உலர்ந்த பொடியாகவோ அல்லது வீட்டில் தயாரிக்கப்பட்ட இனிப்பு பெர்ரி கலவையாகவோ உட்கொள்ளலாம். இவை ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது குளிர்காலத்தில் ஒரு பருவகால பழமாகும்.
பவுடர்: காலையில் 1 டீஸ்பூன் அம்லா பவுடரை வெறும் வயிற்றில் ஒரு டீஸ்பூன் தேன் அல்லது வெதுவெதுப்பான நீரில் எடுத்துக் கொள்ளலாம்.
ஜூஸ்: 20 எம்எல் அம்லா ஜூஸை வெதுவெதுப்பான நீரில் காலையில் முதலாவது எடுத்துக் கொள்ளுங்கள்.
சியவன்ப்ராஷ்: சியவன்பிரஷின் முக்கிய மூலப்பொருள் அம்லா. எனவே நீங்கள் ஒரு டீஸ்பூன் சியாவன்ப்ராஷை காலையில் வெறும் வயிற்றில் அல்லது இரண்டு மணி நேர உணவுக்குப் பிறகு வெதுவெதுப்பான நீரில் எடுத்துக் கொள்ளலாம்.
அம்லா முராபா மற்றும் ஊறுகாய்: இந்த குளிர்காலத்தில் முராபா அல்லது ஊறுகாயை சந்தையில் புதிதாக வாங்கிய அம்லாக்களுடன் தயாரித்து தினமும் உங்கள் உணவோடு உண்ணலாம்.
புளித்த பழம்: நீங்கள் அம்லாவை நொதித்து ஒவ்வொரு நாளும் ஒன்று அல்லது இரண்டு சாப்பிடலாம்.
அம்லா மிட்டாய்: அம்லாவை குட்டி குட்டி பிஸாக வெட்டி சன்லைட்டில் உலர வைக்க வேண்டும். அவை போதுமான அளவு காய்ந்தவுடன் நீங்கள் அவற்றை சேமித்துவைத்து, தினமும் மிட்டாய்களாக சாப்பிட்டு வரலாம்.
மேலே குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை தவறாமல் முயற்சி செய்து பாருங்கள்...
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil