/tamil-ie/media/media_files/uploads/2021/10/tamil-indian-express-2021-10-09T221153.555.jpg)
Health tips in tamil: நாம் தயார் செய்யும் உணவுகளின் சுவையை அதிகரிக்க கிராம்பு பயன்படுத்தப்படுகிறது. உணவை வாயில் ஊற வைப்பதைத் தவிர, இது உடலுக்கு மந்திரம் போல் வேலை செய்யும் ஒரு மருத்துவ மசாலா என கிராம்பை வர்ணிக்கிறார்கள். சைஜியம் அரோமடிகம் என அறிவியல் பூர்வமாக அறியப்படும் கிராம்பு, குறிப்பாக ஆயுர்வேதத்தின் படி, ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. கிராம்பை அன்றாட நமது உணவுகளுடன் சேர்த்துக்கொண்டால், அதன் மருத்துவ குணங்களுடன் வயிற்று நோய்கள் மற்றும் பல்வ லி மற்றும் தொண்டை வலி ஆகியவற்றிலிருந்து நிவாரணம் பெறலாம்.
தோற்றத்தில் சிறியதாகவும் சுவையில் சற்று கசப்பாகவும் இருக்கும் கிராம்பு எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்தது. யூஜெனோல் என்ற உறுப்பு கிராம்புகளில் காணப்படுகிறது. இது மன அழுத்தம், வயிற்று நோய்கள், பார்கின்சன் நோய், உடல் வலி போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது.
கிராம்பில் வைட்டமின் ஈ, வைட்டமின் சி, ஃபோலேட், ரிபோஃப்ளேவின், வைட்டமின் ஏ, தியாமின், வைட்டமின் டி, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போன்ற அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன.
பொதுவாக கிராம்பை நாம் எந்த நேரத்திலும் வேண்டுமானாலும் உட்கொள்ளலாம், ஆனால் படுக்கைக்கு முன் அதை உட்கொண்டால், அதன் நன்மை இரட்டிப்பாகும்.
/tamil-ie/media/media_files/uploads/2021/10/tamil-indian-express-2021-10-09T211528.331-1.jpg)
கிராம்பை எப்படி உட்கொள்வது:
கிராம்பில் ஒரு கலப்பு முகவர் உள்ளது, இது உட்புறத்திலும் தோலிலும் பயனுள்ளதாக இருக்கும். அதன் பலன்களைப் பெற, இரவில் படுக்கும் முன் 2 கிராம்புகளை மெல்லுங்கள். இதற்குப் பிறகு, 1 கிளாஸ் வெதுவெதுப்பான நீரை குடிக்கவும். இது முகப்பரு உள்ளிட்ட பல பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும்.
வெதுவெதுப்பான நீருடன் கிராம்பு சேர்த்து உட்கொண்டால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பின்வருமாறு:-
இரவில் கிராம்பை உட்கொள்வது மலச்சிக்கல், அமிலத்தன்மை, வயிற்றுப்போக்கு போன்ற வயிற்றுப் பிரச்சினைகளைப் போக்க உதவும். கூடுதலாக, செரிமான அமைப்பு சரியாக வேலை செய்யவும் இது உதவுகிறது.
கிராம்பில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. முகப்பருவுக்கு உதவும் ஒரு குறிப்பிட்ட வகை சாலிசிலேட் இதில் உள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2021/10/tamil-indian-express-2021-10-09T223945.669.jpg)
உங்கள் பற்களில் புழுக்கள் இருந்தால், வெதுவெதுப்பான நீரில் கிராம்பை உட்கொள்வது அதிலிருந்து விடுபட உதவும். மேலும் இது பல் வலியைப் போக்கவும் உதவுகிறது.
கிராம்பு சாப்பிடுவதால் வாயில் இருந்து துர்நாற்றம் மறைந்து போகும். இது நாக்கில் உள்ள பாக்டீரியா மற்றும் தொண்டையின் மேல் பகுதியையும் சுத்தம் செய்யவும் உதவுகிறது.
கிராம்பு தொண்டை புண் மற்றும் வலியிலிருந்து விடுபட உதவுகிறது.
கைகள் மற்றும் கால்களின் நடுங்கும் பிரச்சனையை நீங்கள் எதிர்கொண்டால், படுக்கைக்கு முன் 1-2 கிராம்புகளை வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ளலாம். சில நாட்களில் நீங்கள் பலன் பெறுவீர்கள்.
உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் பலவீனமாக இருந்தால், தினமும் கிராம்புகளை உட்கொள்ளத் தொடங்குங்கள்.
சளி, இருமல், வைரஸ் தொற்று, மூச்சுக்குழாய் அழற்சி, சைனஸ், ஆஸ்துமா போன்ற பிரச்சனையிலிருந்து விடுபட, நீங்கள் தினமும் கிராம்பை உட்கொள்ள வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.