மாதுளை, சியா விதை, வெந்தய நீர்… ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் பானங்கள் இவைதான்!
foods for high blood pressure in tamil: மாதுளை ஜூஸில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் உள்ளன. இவற்றில் கிரீன் டீ மற்றும் ரெட் ஒயின் போன்றவற்றை விட 3 மடங்கு அதிகளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் காணப்படுகின்றன.
foods for high blood pressure in tamil: மாதுளை ஜூஸில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் உள்ளன. இவற்றில் கிரீன் டீ மற்றும் ரெட் ஒயின் போன்றவற்றை விட 3 மடங்கு அதிகளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் காணப்படுகின்றன.
Foods for high bp in tamil: ரத்த அழுத்தம் ஒரு கொடிய நோயாக உருவெடுத்துள்ளது. 3 இந்தியர்களில் ஒருவர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று கார்டியாலஜிக்கல் சொசைட்டி ஆப் இந்தியா (சி.எஸ்.ஐ) அறிக்கை அளித்துள்ளது. உயர் ரத்த அழுத்த நோயாளிகள் உப்பின் அளவை குறைக்கவும், அதிகம் சோடியம் உள்ளடங்கிய உணவுகளை உட்கொள்ள வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
Advertisment
உயர் ரத்த அழுத்த பிரச்சினையை எதிர்கொண்டு வரும் மக்கள் முறையான உணவுளை உட்கொண்டு வருவதன் மூலம் அவற்றை எளிதில் கட்டுப்படுத்துவதுடன் பல்வேறு நோய் பாதிப்புகளில் இருந்தும் தற்காத்துக்கொள்ளலாம். அந்த வகையில் ரத்த அழுத்தம் உள்ள மக்கள் இந்த கோடை காலத்தில் தெரிவு செய்து உட்கொள்ள வேண்டிய சில பானங்களை இங்கு பகிர்ந்துள்ளோம்.
மாதுளை ஜூஸ்
பொட்டாசியம் நிறைந்த உணவுகள் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவ்வகையில் மாதுளை பழத்தில் பொட்டாசியம் அதிகளவில் நிரம்பியுள்ளது. இதனால், உயர் ரத்த அழுத்த பாதிப்பு உள்ள மக்கள் மாதுளை ஜூஸ் அன்றாட பருகி வரலாம்.
Advertisment
Advertisements
மாதுளை ஜூஸில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் உள்ளன. இவற்றில் கிரீன் டீ மற்றும் ரெட் ஒயின் போன்றவற்றை விட 3 மடங்கு அதிகளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் காணப்படுகின்றன.
ஆப்பிள் சிடேர் வினிகர்:
ஆப்பிள் சிடேர் வினிகரில் பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்கள் மிகுந்துள்ளன. இவை உடலில் இருந்து தேவையற்ற சோடியம் மற்றும் நச்சுப் பொருட்களை நீக்கும் தன்மை கொண்டது.
ஆப்பிள் சிடேர் வினிகரில் உள்ள என்சைம்கள் உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன.
காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் வெந்நீரில் சில துளிகள் ஆப்பிள் சிடேர் வினிகர் மற்றும் தேன் கலந்து பருகி வந்தால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். இவற்றுடன் எலுமிச்சை சாறையும் பயன்படுத்தலாம்.
சியா விதை நீர்
சியா விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிரம்பியுள்ளன. இவை ரத்தத்தை நீர்த்துப்போகச் செய்து உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன.
சியா விதைகளை தண்ணீரில் நன்றாக கழுவிவிட்டு பின்பு அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பின்பு அந்த நீரை வடிகட்டி, பருகலாம். இந்த அற்புத பானத்தை தொடர்ந்து ஒரு மாதம் பருகி வந்தால் ரத்த அழுத்தத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை காணலாம்.
வெந்தய நீர்
வெந்தயம் நார்ச்சத்துக்கு முக்கிய ஆதாரம் ஆகும். இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்த வெந்தயத்தை, காலையில் வெறும் வயிற்றில் அவற்றின் தண்ணீரை மட்டும் வடிகட்டி குடித்து வரலாம். இப்படி செய்து வருவதன் மூலம் ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தலாம். மேலும் பல்வேறு நோய்களையும் தடுக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“