
அதிமுக தலைமை, ஊர்வாயை மூட முடியாது. அதனால், உலை வாயை மூட முடிவு செய்து அதிமுகவில் இருந்து யாரும் ஊடகங்களில் விவாதங்களில் பங்கேற்கமாட்டார்கள் என்று அறிவித்தது.
நிர்மலா சீதாராமன் புறக்கணித்த விவகாரத்தில் இருந்தே மைத்ரேயன் மீது ஓ.பி.எஸ் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
மைத்ரேயன் அதிமுக.வில் கிளப்பிய பூகம்பம் சுலபத்தில் ஓயாது போல! ‘ஓபிஎஸ் அணி எனக் கூறி தொண்டர்களை ஒதுக்குறாங்க’ என்கிறார் அவர்.
மைத்ரேயன் – தம்பிதுரை இடையிலான கருத்து மோதலுக்கு முகநூல் பதிவு மட்டும் காரணமல்ல. டெல்லி அதிகாரப் போட்டியே பிரதான காரணம் என்கிறார்கள்.
மைத்ரேயன் இன்று தனது முகநூல் பக்கத்தில் மீண்டும் திரியை பற்ற வைத்திருக்கிறார். தம்பிதுரைக்கு சுடச்சுட பதில் கொடுத்திருக்கிறார் மைத்ரேயன்.