ஆனந்த் கோபால் மகிந்திரா (Anand Mahindra), இந்திய பில்லியனர் தொழிலதிபரும், மகிந்திரா குழுமத்தின் தலைவருமாவார். இவர் மகிந்திரா அண்டு மகிந்திராவின் இணை நிறுவனர் ஜகதீஷ் சந்திர மகிந்திராவின் பேரன் ஆவார்
1955 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி மும்பையில் மறைந்த தொழிலதிபர் ஹரிஷ் மகிந்திரா, இந்திரா மகிந்திரா ஆகியோருக்கு பிறந்தார் ஆனந்த் மகிந்திரா. இவருக்கு அனுஜா சர்மா, ராதிகா நாத் என்ற இரண்டு சகோதரிகள் உள்ளனர். லாரன்ஸ் பள்ளியில் தனது ஆரம்ப பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் திரைப்படத் தயாரித்தல் மற்றும் கட்டிடக்கலை ஆகியவற்றைப் பயின்றார். பின்னர், 1981 இல், ஆர்வர்டு வர்த்தகப் பள்ளியில் வணிக மேலாண்மையில் முதுகலை படிப்பை நிறைவு செய்தார்.
1996 ஆம் ஆண்டில், இந்தியாவில் நலிந்த சிறுமிகளுக்கு கல்வியை ஆதரிக்கும் நன்ஹி காளி என்ற ஓர் அரசு சாரா அமைப்பை நிறுவினார்.
ஆனந்த், பத்திரிக்கையாளர் அனுராதாவை திருமணம் செய்துகொண்டார். இவரது மனைவி வெர்வ் என்ற பத்திரிகையைத் தொடங்கினார். இவர் தற்போது வெர்வ் மற்றும் மேன்ஸ் வேர்ல்ட் பத்திரிகைகளின் ஆசிரியராக உள்ளார். இவர்களுக்கு திவ்யா, ஆலிகா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஆனந்த் மகிந்திரா, பல உள்ளூர் சாதனையாளர்களின் படைப்புகளை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு பாராட்டி வருகிறார். Read More
portrait of industrialist Anand Mahindra using ancient Tamil letters video goes viral Tamil News: தமிழ்மொழியின் பிரம்மாண்டத்தை கண்டு தான் வியப்பதாகவும், இந்த…
அன்னையர் தினத்தன்று, இட்லி அம்மாவுக்கு பரிசளிக்க, சரியான நேரத்தில் வீட்டைக் கட்டி முடித்ததற்காக ஆனந்த் மஹிந்திரா தனது குழுவினருக்கு நன்றி தெரிவித்தார்.
ஆட்டோவில் வீடு கட்டி அசத்திய அசகாயசூரன் சென்னையைச் சேர்ந்த இளைஞர் அருண் பிரபுவை பாராட்டிய தொழிலதிபர் ஆனந்த் மஹிந்த்ரா, அவருடைய தொடர்பு எண்ணைக் கேட்டிருப்பது சமூக ஊடகங்களில்…
மஹிந்திரா குழும நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா டுவிட் செய்துள்ள ஒரு உணவகத்தின் பியூர் வெஜிடேரியன் உணவுப் பட்டியல் பலகை புகைப்படம் சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி…
Anand Mahindra : உலகின் மிக தொன்மையான தமிழ் மொழியை படிக்காததற்காக வெட்கப்படுவதாக, நாட்டின் முன்னணி தொழிலதிபர்களுள் ஒருவரான ஆனந்த் மஹிந்திரா, டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கோவை பாரத் கேஸுக்கு நன்றி தெரிவித்த ஆனந்த் மஹிந்திரா, “நான் தொடர்ந்து கமலாத்தாளுக்கு சிலிண்டர் வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்