தமிழ்நாட்டில் கரூர் மாவட்டத்தில் தொட்டம்பட்டி கிராமத்தில் குப்புசாமி – பரமேஸ்வர் தம்பதிக்கு பிறந்தவர் அண்ணாமலை (Annamalai). கோவையில் என்ஜினீயரிங் படித்த அவர், இந்திய மேலாண்மைப் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டப்படிப்பை முடித்தார். 2011ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் தேர்வில் தேர்ச்சியடைந்து, கர்நாடகாவின் உடுப்பியில் காவல்துறை துணை கண்காணிப்பாளராக பணியமர்ந்தார். போதை பொருள் விற்பனை செய்பவரை பிடித்தல், இரவு பைக்கில் ரோந்து பணி என அதிரடி நடவடிக்கைகளால் அவரை அம்மாநில மக்கள் ‘கர்நாடக சிங்கம்’ என்று அழைத்தாக கூறப்படுகிறது.
2015ஆம் ஆண்டு உடுப்பியின் காவல்துறை கண்காணிப்பாளராகவும், 2016ஆம் ஆண்டு சிக்மளூரு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராகவும் பணியாற்றினார். அதிரடி நடவடிக்கைகள் காரணமாக, 2018ஆம் ஆண்டு அண்ணாமலை டி.சி.பி.யாக பதவி உயர்வு பெற்றார். பின்னர், 2019இல் மக்கள் பணியாற்ற காவல் துறை பணியிலிருந்து விலகினார்.
ராஜினாமா செய்த அண்ணாமலை ‘வீ தி லீடர்’ என்ற அமைப்பை உருவாக்கி, சமூக பணிகளையும், இயற்கை விவசாயம் பணிகளையும் மேற்கொண்டு வந்தார்.
பின்னர் 2020 இல், தமிழக மாநில பாஜக துணை தலைவராக நியமனம் செய்யப்பட்டார். பாஜகவின் விசுவாசியாக பல அறிக்கைகளையும் அண்ணாமலை தொடர்ச்சியாக வெளியிட்டு வந்த நிலையில், அப்போதைய பாஜக மாநில தலைவர் எல்.முருகன் மத்திய இணையமைச்சராக சென்றதையடுத்து, தமிழக பாஜக மாநில தலைவர் பொறுப்பு அண்ணாமலை கைவசம் வந்தது. தமிழ்நாட்டில் பாஜகவை நிலைநாட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். Read More
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பிரதான், மாண்டவியா மற்றும் அண்ணாமலை ஆகியோர் வேட்பாளர் தேர்வு மற்றும் தேர்தல் வியூகங்களில் முக்கிய பங்கு வகிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக பா.ஜ.க மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி, தி.மு.க ஒரு தீய சக்தி என்று அ.தி.மு.க-வின் முன்னாள் தலைவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் கூறியுள்ளனர். தி.மு.க-வை வீழ்த்த…
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தி.மு.க அமைச்சர் கே.என். நேருவும், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் வாக்குக்கு பணம் கொடுப்பது பற்றி விவாதித்ததாக வீடியோ…
அண்மையில், பா.ஜ.க-வில் இருந்து நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம் உடன் கோவையைச் சேர்ந்த பா.ஜ.க நிர்வாகி ஒருவர், போனில் பா.ஜ.க அண்ணாமலையைப் பற்றி பேசிய ஆடியோ லீக் ஆகி…
கேரளாவில் பா.ஜ.க-வின் தொலைக்காட்சியாகக் கருதப்படும் ஜனம் டிவியின் நீட்டிப்பாக, தமிழில் செய்தித் தொலைக்காட்சி தொடங்க தமிழக பா.ஜ.க திட்டமிட்டுளது. பா.ஜ.க தொலைக்காட்சி தொடங்கும் திட்டம் திங்கள்கிழமை அறிவிக்கப்படும்…
கடலூரில் நடைபெற்ற பா.ஜ.க மாநில செயற்குழு கூட்டத்தில், தமிழக ஆளுநரை ஒருமையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று வெள்ளிக்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தேஜஸ்வி சூர்யா எமர்ஜென்சி கதவில் இருந்த இடைவெளியை பார்த்ததும் விமானப் பணியாளர்களை அழைத்துக் கூறினார். இதை நானும் பார்த்தேன் – தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை
பா.ஜ.க யுவ மோர்ச்சாவின் தேசியத் தலைவரும், எம்.பி.யுமான தேஜஸ்வி சூர்யா, கடந்த ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி சென்னை விமான நிலையத்தில், இண்டிகோ விமானம் புறப்படுவதற்கு முன்பு…
ஆளுனரின் பொங்கல் அழைப்பிதழில் தமிழ்நாடு அரசு சின்னம் இருந்திருக்க வேண்டும் என்ற அண்ணாமலை. “ஆளுனர் அப்படிப்பட்டவர் அல்ல என்பதால் நான் அதை ஒரு எழுத்தர் பிழையாகப் பார்க்கிறேன்.”…