பி. கே. சேகர் பாபு(Minister P. K. Sekar Babu) ஒரு இந்திய அரசியல்வாதியும், அமைச்சரும் ஆவார். அதிமுக அவைத் தலைவரான மதுசூதனனின் உறவினரான சேகர்பாபு, 2001 மற்றும் 2006 சட்டமன்றத் தேர்தல்களில் ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில், அதிமுக உறுப்பினராக போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின்னர், கட்சித் தலைமையோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2011 ஜனவரியில் திமுக தலைவர் கருணாநிதியை தனது ஆதரவாளர்களுடன் சந்தித்து திமுக-வில் இணைத்துக் கொண்டார்.
அயராத உழைப்பு காரணமாக, சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது.
திமுக-வின் கோட்டை என வர்ணிக்கப்படும் சென்னை, துறைமுகம் தொகுதியில், 2011-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-வில் இணைந்த பழ.கருப்பையா வெற்றிபெற்று, திமுக-வின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளிவைத்தார். ஆனால், 2016-ல் நடந்த தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்ட சேகர் பாபு வெற்றி பெற்று, துறைமுகம் தொகுதியை மீண்டும் திமுக வசமாக்கினார். தற்போது மீண்டும் 2021 தேர்தலில் துறைமுகம் தொகுதியில் திமுக வேட்பாளராக வெற்றிபெற்ற நிலையில், தற்போது அவருக்கு அறநிலையத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.Read More
சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும அமைச்சர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு கிளம்பாக்கம் பேருந்து முனையத்தின் கட்டுமானப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
12 மணி நேர வேலை மசோதா தொடர்பாக அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் முதலமைச்சர் பிரச்சனையை தீர்ப்பார். யாரும் எதிர்பாராத முடிவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எடுப்பார்…
சென்னை, நங்கநல்லூரில் தர்மலிங்கேஸ்வர் கோயில் குளத்தில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்வின்போது, 5 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து, முதல்வர் ஸ்டாலின் தன்னை அழைத்து கண்டித்ததாக அமைச்சர் பி.கே.…
தி.மு.க சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் மற்றும் உலக மகளிர் தின விழாவில், திடீரென மேடை ஏறிய நடிகை ராதிகா சரத்குமார், இந்த விழாவில், கலைஞரின்…
தற்போது முதற்கட்ட பயணம் முடிவடைந்துள்ள நிலையில், 2-வது கட்ட புனிதயாத்திரை அடுத்த மாதம் மார்ச் 1-ந் தேதியும், மார்ச் 8-ந் தேதியும் இந்த பயணத்திட்டம் மீண்டும் தொடங்க…
“கலைஞர் பேனா நினைவு சிலையை சீமான் உடைத்தால், அதுவரை எங்கள் கைகள் என்ன பூ பறிச்சிட்டு இருக்குமா? கை அவருக்கு மட்டும்தான் இருக்கா?”, என்று அமைச்சர் சேகர்…
பூந்தமல்லியில் உள்ள குத்தம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் புறநகர் பேருந்து நிலையத்திற்கு சென்று அமைச்சர் சேகர் பாபு மற்றும் அமைச்சர் சா.மு.நாசர் ஆய்வு மேற்கொண்டனர்.
சென்னையில் புதிதாக வரவிருக்கும் கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம், கோயம்பேடு பேருந்து நிலையத்தின் நெரிசலைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பணிகளை விரைவில் முடிக்க ஒப்பந்ததாரர்களை கேட்டுக்கொண்டதாக அமைச்சர்…
தமிழக அமைச்சரவையில் இலாக்காக்கள் மாற்றம் செய்யப்பட்டதில், சி.எம்.டி.ஏ துறை சேகர் பாபுவுக்கு ஒதுக்கப்பட்டதையடுத்து, அமைச்சர் சேகர் பாபு அமைச்சர் மா. சுப்பிரமணியத்தை இரவு நேரத்தில் தேடிச் சென்று…