இந்திய திரைப்பட நடிகை ஜோதிகா(Actress Jothika), அக்டோபர் 18 1977இல் மும்பையில் பிறந்தார். இவரது இயற்பெயர் ஜோதிகா ஸதானாஹ் ஆகும். தமிழ், தெலுங்கு, இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகை நக்மா இவரது மாற்றுத் தந்தை வழி சகோதரி ஆவார். தல் நாடகத் தோற்றம் நடிகர் அக்ஷய் கண்ணாவுடன் பல்லவி சின்ஹாவாக இருந்தது டோலி சாஜா கே ரக்னா (1998) ஆகும்.
திரைப்பயணத்தை பொறுத்தவரை, குஷி, பேரழகன், சந்திரமுகி மற்றும் மொழி போன்ற திரைப்படங்களில் நடித்ததற்காக விருதுகளை பெற்றவர். 2005 ஆம் ஆண்டில், தமிழ்நாடு மாநில அரசால் கலைமாமணி விருது வழங்கப்பட்டது
நடிகர் சூர்யாவை விரும்பி செப்டம்பர் 11, 2006 அன்று திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தியா மற்றும் தேவ் என்ற இரு குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்தியிருந்த ஜோதிகா, தற்போது கதாநாயகி முக்கியத்தவம் வாய்ந்த படங்களில் அவ்வப்போது நடித்து வருகிறார். 2017 ஆம் ஆண்டில், “தென் திரைப்படத் துறையில் மிகவும் வெற்றிகரமான நடிகை” என்ற JFW விருதைப் பெற்றார். ஜோதிகா, சூர்யா இணைந்து நடத்தி வரும் 2டி தயாரிப்பு நிறுவனம், அவ்வப்போது முக்கியமான படங்களை தயாரித்து வெளியிட்டு வருகிறது.Read More
Tamil Cinema Update : ஜெயம் ரவியை வைத்து கோமாளி என்ற பெரிய வெற்றிப்படத்தை இயக்கிய இயக்குனர் பிரதீப் ரங்கநானுடன் தேவ் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி…
நடிகை மீரா மிதுன், நடிகர் விஜய் மனைவி சங்கீதா பற்றியும் சூர்யா மனைவி ஜோதிகா பற்றியு அவதூறாகப் பேசியதற்கு நடிகை ஆர்த்தி, தாய்கிழவிக்கு தவடை கிழியும் நேரம்…
நயன்தாரா நடிகையின் காதலர் தான் ஜோதிகாவின் கணவரை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா தான் முதலில் நாயகியாக நடிப்பதாக இருந்தது. இயக்குநரும் அதைத் தான் விரும்பினார்.…