பொருளாதாரப் பிரச்னையில் மௌனம் காக்கிறார் பிரதமர் மோடி; ப.சிதம்பரம் விமர்சனம்
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கப்பட்ட பின்னர், அவர் வியாழக்கிழமை தனது முதல் செய்தியாளர் கூட்டத்தில், பேசினார். அப்போது, நாட்டின் பொருளாதார மந்தநிலை தொடர்பாக நரேந்திர மோடி தலைமையிலான அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.